ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 83 லட்சத்திற்கும் மேல் காணிக்கை: தங்கம், வெள்ளியும் கிடைத்தது

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 அன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம் ரூ.83,70,893, 178 கிராம் தங்கம், 304 கிராம் வெள்ளி கிடைத்தது. அறங்காவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: ஆனைமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

காணிக்கை எண்ணும் பணியில் சலவநாயக்கன்பட்டி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.23,24,376 மற்றும் நிரந்தர உண்டியலில் ரூ.60,46,517 என மொத்தம் ரூ.83,70,893 கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 178 கிராம் தங்கமும், 304 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, பொள்ளாச்சி ஆய்வர் பாக்கியவதி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த காணிக்கை தொகை கோவிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...