ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 83 லட்சத்திற்கும் மேல் காணிக்கை: தங்கம், வெள்ளியும் கிடைத்தது

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 அன்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மொத்தம் ரூ.83,70,893, 178 கிராம் தங்கம், 304 கிராம் வெள்ளி கிடைத்தது. அறங்காவலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


Coimbatore: ஆனைமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அக்டோபர் 8 ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

காணிக்கை எண்ணும் பணியில் சலவநாயக்கன்பட்டி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். தட்டு காணிக்கை உண்டியலில் ரூ.23,24,376 மற்றும் நிரந்தர உண்டியலில் ரூ.60,46,517 என மொத்தம் ரூ.83,70,893 கிடைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 178 கிராம் தங்கமும், 304 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜ், மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, பொள்ளாச்சி ஆய்வர் பாக்கியவதி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த காணிக்கை தொகை கோவிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...