உடுமலை அருகே விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலரும் காயமடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொலிரோ வாகனமும் டெம்போ டிராவல்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 12 மணியளவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன் (45), அவரது மனைவி பிரித்தி (40), மகன்கள் ஜெயப்பிரியன் (11), ஜீவப்பிரியன் (13) மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் கோவை மாவட்டம் தாமரைக்குளத்தில் நடந்த இறப்பு நிகழ்வுக்குச் சென்று திரும்பி வந்தனர்.



உடுமலை அருகே உள்ள கருப்புசாமி புதூர் பகுதியில், பாலக்காடு நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவல்ஸுடன் அவர்கள் பயணித்த பொலிரோ வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தியாகராஜன், அவரது மனைவி பிரித்தி, மகன் ஜெயப்பிரியன் மற்றும் தாய் மனோன்மணி (65) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜனின் தந்தை நாட்ராயன் (75) மற்றும் மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

டெம்போ டிராவல்ஸில் பயணித்த 23 பேரில் சுமார் 12 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் பாலக்காட்டிற்குச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த சோகமான சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...