கோவை குனியமுத்தூரில் அதிமுக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: இரு இளைஞர்கள் கைது

கோவை குனியமுத்தூரில் அதிமுக 92-வது வார்டு செயலாளர் ஜூனியர் ராஜா மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்று அழைக்கப்படும் ஜூனியர் ராஜா (42) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதோடு, கோவை மாநகர அதிமுகவின் 92-ஆவது வார்டு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஜூனியர் ராஜா குனியமுத்தூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரு நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஜூனியர் ராஜா கடுமையாக காயமடைந்தார். தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

பலத்த காயமடைந்த நிலையில் ஜூனியர் ராஜா அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (21) மற்றும் பூமிஸ்வரன் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கொண்ட விசாரணையில், கோபிநாத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜூனியர் ராஜாவுடன் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக, கோபிநாத் தனது நண்பன் பூமேஸ்வரனை கரூரிலிருந்து அழைத்து வந்து ஜூனியர் ராஜா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...