கோவை குனியமுத்தூரில் அதிமுக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: இரு இளைஞர்கள் கைது

கோவை குனியமுத்தூரில் அதிமுக 92-வது வார்டு செயலாளர் ஜூனியர் ராஜா மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்று அழைக்கப்படும் ஜூனியர் ராஜா (42) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதோடு, கோவை மாநகர அதிமுகவின் 92-ஆவது வார்டு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஜூனியர் ராஜா குனியமுத்தூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரு நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஜூனியர் ராஜா கடுமையாக காயமடைந்தார். தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

பலத்த காயமடைந்த நிலையில் ஜூனியர் ராஜா அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (21) மற்றும் பூமிஸ்வரன் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கொண்ட விசாரணையில், கோபிநாத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜூனியர் ராஜாவுடன் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக, கோபிநாத் தனது நண்பன் பூமேஸ்வரனை கரூரிலிருந்து அழைத்து வந்து ஜூனியர் ராஜா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...