கோவை குனியமுத்தூரில் அதிமுக நிர்வாகி மீது அரிவாள் தாக்குதல்: இரு இளைஞர்கள் கைது

கோவை குனியமுத்தூரில் அதிமுக 92-வது வார்டு செயலாளர் ஜூனியர் ராஜா மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்று அழைக்கப்படும் ஜூனியர் ராஜா (42) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதோடு, கோவை மாநகர அதிமுகவின் 92-ஆவது வார்டு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, ஜூனியர் ராஜா குனியமுத்தூர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இரு நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இந்த தாக்குதலில் ஜூனியர் ராஜா கடுமையாக காயமடைந்தார். தாக்குதல் நடத்திய இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர்.

பலத்த காயமடைந்த நிலையில் ஜூனியர் ராஜா அருகிலிருந்தவர்களால் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்த தகவலறிந்து விரைந்து வந்த குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குனியமுத்தூரில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் (21) மற்றும் பூமிஸ்வரன் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கொண்ட விசாரணையில், கோபிநாத் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜூனியர் ராஜாவுடன் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக, கோபிநாத் தனது நண்பன் பூமேஸ்வரனை கரூரிலிருந்து அழைத்து வந்து ஜூனியர் ராஜா மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...