பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடக்கம்; உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா கோரிக்கை

பொள்ளாச்சியில் சிதலமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் சிரமம்.


கோவை: பொள்ளாச்சி, தேர்நிலையம் முதல் உஞ்சவேலம்பட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தென்மேற்கு பருவ மழையால் சிதலமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொள்ளாச்சியில் உள்ள தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியான உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர். வாகனங்கள் தாராபுரம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும்போது, உடுமலையிலிருந்து வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உஞ்சவேலம்பட்டி அருகில் உள்ள தனியார் உணவகம் முன்பு சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் வரிசை கட்டி நிற்பதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏற்கெனவே இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...