பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடக்கம்; உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா கோரிக்கை

பொள்ளாச்சியில் சிதலமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் சிரமம்.


கோவை: பொள்ளாச்சி, தேர்நிலையம் முதல் உஞ்சவேலம்பட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தென்மேற்கு பருவ மழையால் சிதலமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொள்ளாச்சியில் உள்ள தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியான உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர். வாகனங்கள் தாராபுரம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும்போது, உடுமலையிலிருந்து வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உஞ்சவேலம்பட்டி அருகில் உள்ள தனியார் உணவகம் முன்பு சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் வரிசை கட்டி நிற்பதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏற்கெனவே இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...