அன்னூர் அருகே தனியார் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க இந்த செயலி உதவும்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாணவிகள் எளிதாக காவல்துறையை அணுகி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவிநாசி காவல் நிலைய மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பத்மாவதி தலைமை வகித்தார். சேவூர் காவல் நிலைய தலைமை காவலர் அலமேலு மங்கை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து காவல்துறை பெண் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், 'போலீஸ் அக்கா' செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (8ஆம் தேதி) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...