அன்னூர் அருகே தனியார் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க இந்த செயலி உதவும்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாணவிகள் எளிதாக காவல்துறையை அணுகி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவிநாசி காவல் நிலைய மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பத்மாவதி தலைமை வகித்தார். சேவூர் காவல் நிலைய தலைமை காவலர் அலமேலு மங்கை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து காவல்துறை பெண் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், 'போலீஸ் அக்கா' செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (8ஆம் தேதி) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...