அன்னூர் அருகே தனியார் கல்லூரியில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்க இந்த செயலி உதவும்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே செல்லப்பம்பாளையத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவர் கல்லூரியில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எளிதாக தீர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் 'போலீஸ் அக்கா' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாணவிகள் எளிதாக காவல்துறையை அணுகி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவிநாசி காவல் நிலைய மகளிர் காவல் உதவி ஆய்வாளர் பத்மாவதி தலைமை வகித்தார். சேவூர் காவல் நிலைய தலைமை காவலர் அலமேலு மங்கை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து காவல்துறை பெண் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், 'போலீஸ் அக்கா' செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (8ஆம் தேதி) மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...