கோவையில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க அக்டோபர் 19, 2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமே ஏற்கப்படும்.



கோவை: கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-ன் கீழ் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற வேண்டும்.

ஏற்கனவே செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6, 2024 வரை இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது, சென்னை அரசு முதன்மைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 19, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெடிபொருள் சட்டவிதிகள் 2008 விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அக்டோபர் 19-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, அதற்கான தகவலை இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அனுமதியின்றி அல்லது உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...