கோவையில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க அக்டோபர் 19, 2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமே ஏற்கப்படும்.



கோவை: கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் (மாநகராட்சி பகுதிகளைத் தவிர்த்து) தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விரும்புவோர், வெடிபொருள் சட்டவிதிகள் 2008-ன் கீழ் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற வேண்டும்.

ஏற்கனவே செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 6, 2024 வரை இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது, சென்னை அரசு முதன்மைச் செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 19, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். வெடிபொருள் சட்டவிதிகள் 2008 விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அக்டோபர் 19-ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ அல்லது நிராகரிக்கப்பட்டாலோ, அதற்கான தகவலை இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், அனுமதியின்றி அல்லது உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...