பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிராமண சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பிராமணர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிடுவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு பிராமண சங்கங்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிராமணர்களுக்கு எதிராக நூலிபான், Crossbelt, மாமி போன்ற சொற்களை பயன்படுத்தி கொச்சைப்படுத்துவோர் மீது PCR சட்டம் பாய வேண்டும் என்று வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தின்போது பிராமணர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பிராமணர்களை காக்க சிறப்பு PCR சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பும் கோரிக்கை போராட்டத்தை இன்று துவக்கி இருக்கிறோம்" என்றார்.



மேலும், "பிராமணர்களை யாராவது மட்டமாக பேசினால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...