பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிராமண சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பிராமணர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிடுவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு பிராமண சங்கங்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிராமணர்களுக்கு எதிராக நூலிபான், Crossbelt, மாமி போன்ற சொற்களை பயன்படுத்தி கொச்சைப்படுத்துவோர் மீது PCR சட்டம் பாய வேண்டும் என்று வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தின்போது பிராமணர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பிராமணர்களை காக்க சிறப்பு PCR சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பும் கோரிக்கை போராட்டத்தை இன்று துவக்கி இருக்கிறோம்" என்றார்.



மேலும், "பிராமணர்களை யாராவது மட்டமாக பேசினால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...