பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிராமண சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பிராமணர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிடுவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு பிராமண சங்கங்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிராமணர்களுக்கு எதிராக நூலிபான், Crossbelt, மாமி போன்ற சொற்களை பயன்படுத்தி கொச்சைப்படுத்துவோர் மீது PCR சட்டம் பாய வேண்டும் என்று வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தின்போது பிராமணர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பிராமணர்களை காக்க சிறப்பு PCR சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பும் கோரிக்கை போராட்டத்தை இன்று துவக்கி இருக்கிறோம்" என்றார்.



மேலும், "பிராமணர்களை யாராவது மட்டமாக பேசினால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...