ஆனைமலையில் நெல் அறுவடை தொடக்கம்: காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை தொடங்கியது. விவசாயிகள் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் இன்று தொடங்கின.



சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.



ஆழியார் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு மற்றும் போதுமான அளவு பருவமழை பெய்ததால், வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.



அறுவடைப் பணிகளை தொடங்குவதற்கு முன், விவசாயிகள் முதலில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வயலில் உள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, பொங்கல் வைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, வயல்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த நிலையில், விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1. ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் கோபத்திற்கு நெல் அறுவடை செய்யும் போது மட்டும் கொள்முதல் நிலையங்களை திறக்காமல், நிரந்தரமாக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

2. கேரளா மாநிலத்தைப் போல, நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் கொள்முதல் விலையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

3. நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...