ஆனைமலையில் நெல் அறுவடை தொடக்கம்: காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை தொடங்கியது. விவசாயிகள் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் இன்று தொடங்கின.



சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.



ஆழியார் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு மற்றும் போதுமான அளவு பருவமழை பெய்ததால், வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.



அறுவடைப் பணிகளை தொடங்குவதற்கு முன், விவசாயிகள் முதலில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வயலில் உள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, பொங்கல் வைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, வயல்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த நிலையில், விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1. ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் கோபத்திற்கு நெல் அறுவடை செய்யும் போது மட்டும் கொள்முதல் நிலையங்களை திறக்காமல், நிரந்தரமாக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

2. கேரளா மாநிலத்தைப் போல, நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் கொள்முதல் விலையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

3. நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...