சிறுவாணி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் ஐயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இராஜேந்திரன் (35). இவர் இன்று தனது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) மற்றும்  10 வயது மகள் தீக்ஷா ஆகியோருடன் சிறுவாணி சாலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். 



அப்போது, ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அருகே '14 ஏ' எண் கொண்ட காந்திபுரம்- செம்மேடு அரசு பேருந்து வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அப்பேருந்து இராஜேந்திரன் குடும்பத்தினர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் இராஜேந்திரன், அவரது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தீக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தோரின் பிரேதங்களை மீட்டனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...