கோவை ரயில் நிலையத்தில் உதடு, அண்ணப்பிளவு குறித்த விழிப்புணர்வு: நீல ஒளியில் ஜொலித்த நுழைவாயில்

கோவை ரயில் நிலையத்தில் உதடு மற்றும் அண்ணப்பிளவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, நுழைவாயில் நீல நிறத்தில் ஒளியூட்டப்பட்டது. ஸ்மைல் ட்ரெயின் அமைப்பின் 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெற்றது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் உதடு மற்றும் அண்ணப்பிளவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நிலைய நுழைவாயில் நீல நிறத்தால் ஒளியூட்டப்பட்டது. உதடு பிளவு மற்றும் அண்ணப்பிளவு உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனமான ஸ்மைல் ட்ரெயின் தனது 25-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அண்ணப்பிளவு என்பது உணவு உண்பதில் இருந்து மூச்சுவிடுவது மற்றும் பேசுவது வரை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். இந்த பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கங்கா மருத்துவமனை மற்றும் ஸ்மைல் ட்ரெயின் இந்தியா இணைந்து உலக புன்னகை தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.



கோவை ரயில் நிலையத்தில் உள்ள நீலகிரி மலை ரயிலில் நீல நிற ஒளி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக, ஒரே நேரத்தில் அதிகபட்ச நினைவுச் சின்னங்களில் ஒளியேற்றப்பட்டதற்கான பதிவும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு, அண்ணப்பிளவு அறுவை சிகிச்சை செய்து கொண்ட குழந்தைகளின் புகைப்படங்களை கொண்ட ஸ்மைல் ட்ரெயின் டிஜிட்டல் புகைப்பட ஆல்பம், அதிக புன்னகைக்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தைப் பெற்றது. அண்ணப்பிளவுடன் பிறந்த குழந்தைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, நீல நிற விளக்குகள் மூலம் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...