முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து பசுமை மாரத்தான் போட்டியை நடத்தினர். மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. கோவை பந்தய சாலையில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பசுமை மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக தனித் தனியாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 வயதிற்குட்பட்டோருக்கும், 13 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் தமிழ்மகன், அசோக்குமார், நிர்வாஸ், பிரகாஷ், ஆனந்த், சுதன் மற்றும் முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பசுமை மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக தனித் தனியாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 வயதிற்குட்பட்டோருக்கும், 13 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் தமிழ்மகன், அசோக்குமார், நிர்வாஸ், பிரகாஷ், ஆனந்த், சுதன் மற்றும் முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

