மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்தும் கோவையில் பசுமை மாரத்தான் போட்டி!

முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து பசுமை மாரத்தான் போட்டியை நடத்தினர். மரங்களை காப்பாற்றவும், நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி நடைபெற்றது. கோவை பந்தய சாலையில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். 



பசுமை மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவுகளாக தனித் தனியாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 13 வயதிற்குட்பட்டோருக்கும், 13 வயதிற்கு மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் என போட்டிகள் இரு பிரிவில் நடைபெற்றது. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூபாய் 5000, இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.



இதில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள் தமிழ்மகன், அசோக்குமார், நிர்வாஸ், பிரகாஷ், ஆனந்த், சுதன் மற்றும் முன்னாள் தேசிய படை மாணவர்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...