சூலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு; தாளியூரில் புதிய சுகாதார மையம் திறப்பு

கோயம்புத்தூர்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் சூலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாளியூரில் ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்தபோது, இன்று அதிகாலை திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்த புறநோயாளிகளையும், உள்நோயாளிகளையும் நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து விசாரித்தார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின் போது, கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், தலைமை மருத்துவர் வாணி ரங்கராஜன், மருத்துவர் கஜேந்திரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதே நாளில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் தாளியூரில், ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர் CMK.குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...