சூலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு; தாளியூரில் புதிய சுகாதார மையம் திறப்பு

கோயம்புத்தூர்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் சூலூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தாளியூரில் ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார்.


Coimbatore: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்தபோது, இன்று அதிகாலை திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு வந்திருந்த புறநோயாளிகளையும், உள்நோயாளிகளையும் நேரில் சந்தித்த அமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு குறித்து விசாரித்தார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், விரைவில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்தார்.



இந்த ஆய்வின் போது, கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், தலைமை மருத்துவர் வாணி ரங்கராஜன், மருத்துவர் கஜேந்திரன் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

அதே நாளில், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் தாளியூரில், ரூ.58.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஒன்றிய கழக செயலாளர் CMK.குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...