கோவையில் திடீர் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதிகளில் திடீர் ஆலங்கட்டி மழை பெய்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த இம்மழை மக்களை மகிழ்வித்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த இந்த ஆலங்கட்டி மழை அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 3 முதல் 5 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையின் துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.



பிற்பகல் 1:00 மணி முதல் கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக, பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.



இந்த எதிர்பாராத ஆலங்கட்டி மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...