சிட்கோ பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்



கோவை சிட்கோ பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. அடுத்தடுத்து மேலும் இரண்டு கம்பெனிகளுக்கு பரவிய தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நூர் அகமது என்பவருக்கு சொந்தமான வின் பிளாஸ்டிக் என்ற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மில் ஒரு காகம் அடிபட்டதால், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிற்சாலையில் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதில் பிளாஸ்டிக் பொருட்கள், உருக்கு இயந்திரம், அச்சு இயந்திரம் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.  இந்த பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. மேலும் பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடமும் சேதமடைந்தது. உரிமையாளர் நூர் அகமதின் பார்ட்னர் ஒருவரின் மகன் திருமணத்திற்காக தொழிலாளர்கள் சென்று விட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள டேப் கம்பெனி மற்றும் மெத்தை கம்பெனிகளுக்கும் பரவியது.

இந்த தீயை 3 தீயணைப்பு லாரிகளில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு லாரிகளில் போதியளவு தண்ணீர் கொண்டு வரவில்லை எனவும், இதன் காரணமாக தீயணைப்பு பணிகள் தாமதமாக நடந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த தீ விபத்து குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...