சிட்கோ பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- தண்ணீரின்றி தவிக்கும் தீயணைப்பு வீரர்கள்



கோவை சிட்கோ பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. அடுத்தடுத்து மேலும் இரண்டு கம்பெனிகளுக்கு பரவிய தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நூர் அகமது என்பவருக்கு சொந்தமான வின் பிளாஸ்டிக் என்ற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மில் ஒரு காகம் அடிபட்டதால், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிற்சாலையில் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது.

இதில் பிளாஸ்டிக் பொருட்கள், உருக்கு இயந்திரம், அச்சு இயந்திரம் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின.  இந்த பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. மேலும் பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடமும் சேதமடைந்தது. உரிமையாளர் நூர் அகமதின் பார்ட்னர் ஒருவரின் மகன் திருமணத்திற்காக தொழிலாளர்கள் சென்று விட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள டேப் கம்பெனி மற்றும் மெத்தை கம்பெனிகளுக்கும் பரவியது.

இந்த தீயை 3 தீயணைப்பு லாரிகளில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு லாரிகளில் போதியளவு தண்ணீர் கொண்டு வரவில்லை எனவும், இதன் காரணமாக தீயணைப்பு பணிகள் தாமதமாக நடந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த தீ விபத்து குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...