சிங்காநல்லூர் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா: அமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை

கோவை சிங்காநல்லூரில் நாளை நடைபெறவுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியனை வரவேற்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கிழக்கு மண்டல அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூரில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தர உள்ளார்.

இந்நிலையில், அமைச்சரை வரவேற்கும் பொருட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று (03.10.2024) வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையாளர், உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், CHO மற்றும் ZSO ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் திராவிட மணி, ராமகிருஷ்ணன் மற்றும் நகர் நல மையத்தின் மருத்துவர்களும் பங்கேற்றனர். திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதேவேளை, கிழக்கு மண்டலம், வார்டு எண் 59, கிருஷ்ணமா நாயக்கர் வீதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடைபெற்றது.



இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக்கிற்கு புகார் வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.



இதனையடுத்து, இன்று (03.10.2024) வியாழக்கிழமை அந்த மழைநீர் வடிகால் உடனடியாக தூய்மைப்படுத்தப்பட்டது. இச்சீரமைப்பு பணியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...