சிங்காநல்லூர் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா: அமைச்சர் வருகைக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை

கோவை சிங்காநல்லூரில் நாளை நடைபெறவுள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தரவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியனை வரவேற்க செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கிழக்கு மண்டல அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூரில் அமைந்துள்ள நகர்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தர உள்ளார்.

இந்நிலையில், அமைச்சரை வரவேற்கும் பொருட்டு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இன்று (03.10.2024) வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக், உதவி ஆணையாளர், உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், CHO மற்றும் ZSO ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும், இக்கூட்டத்தில் திராவிட மணி, ராமகிருஷ்ணன் மற்றும் நகர் நல மையத்தின் மருத்துவர்களும் பங்கேற்றனர். திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதேவேளை, கிழக்கு மண்டலம், வார்டு எண் 59, கிருஷ்ணமா நாயக்கர் வீதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி நடைபெற்றது.



இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக்கிற்கு புகார் வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.



இதனையடுத்து, இன்று (03.10.2024) வியாழக்கிழமை அந்த மழைநீர் வடிகால் உடனடியாக தூய்மைப்படுத்தப்பட்டது. இச்சீரமைப்பு பணியால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...