கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் கைது

கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபர் மருதாசலம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.


Coimbatore: கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெள்ளானைப்பட்டியை சேர்ந்த மருதாசலம் (48) என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், கோவை பிரஸ் கிளப் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாதம்தோறும் பணம் பெற்று வருவதாகவும், அதற்கு பிரஸ் கிளப் தலைவராக இருந்த பாபு முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

பாபு தவிர முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் கேமராமேன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மருதாசலம் பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு இணைய வழியில் பாபு புகார் அளித்தார்.

விசாரித்த சைபர் கிரைம் போலீசார் மருதாசலத்தை நேற்று (அக்டோபர் 2) கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...