கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் கைது

கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபர் மருதாசலம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.


Coimbatore: கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெள்ளானைப்பட்டியை சேர்ந்த மருதாசலம் (48) என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், கோவை பிரஸ் கிளப் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாதம்தோறும் பணம் பெற்று வருவதாகவும், அதற்கு பிரஸ் கிளப் தலைவராக இருந்த பாபு முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

பாபு தவிர முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் கேமராமேன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மருதாசலம் பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு இணைய வழியில் பாபு புகார் அளித்தார்.

விசாரித்த சைபர் கிரைம் போலீசார் மருதாசலத்தை நேற்று (அக்டோபர் 2) கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...