கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் கைது

கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபர் மருதாசலம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.


Coimbatore: கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெள்ளானைப்பட்டியை சேர்ந்த மருதாசலம் (48) என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், கோவை பிரஸ் கிளப் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாதம்தோறும் பணம் பெற்று வருவதாகவும், அதற்கு பிரஸ் கிளப் தலைவராக இருந்த பாபு முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

பாபு தவிர முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் கேமராமேன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மருதாசலம் பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு இணைய வழியில் பாபு புகார் அளித்தார்.

விசாரித்த சைபர் கிரைம் போலீசார் மருதாசலத்தை நேற்று (அக்டோபர் 2) கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...