காந்தி ஜெயந்தி: கோவை கதர் அங்காடியில் மாவட்ட ஆட்சியர் மரியாதை - தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோவை கதர் அங்காடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மரியாதை செலுத்தினார். தீபாவளி சிறப்பு விற்பனையையும் தொடங்கி வைத்தார். கதர் பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள கதர் அங்காடி நிலையத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநர் ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் விற்பனையையும் அவரே பெற்றுக் கொண்டார். காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



கதர் ரகங்களுக்கு 30 சதவீதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், பாலிஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கிராமப்புற ஏழைப் பெண்களின் மேம்பாட்டு நலனை கருதியும், சிறுதொழில் வல்லுநர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் இந்த தள்ளுபடி சலுகையை வழங்கியுள்ளன. பொதுமக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கதர் ரகங்களை அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...