காந்தி ஜெயந்தி: உடுமலையில் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

உடுமலை நகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ப.பாலமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் ஆடுவதைக்கூடம் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதைக்கவோ அல்லது இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "உத்தரவை மீறி செயல்பட்டால் இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன் உரிமம் இரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...