காந்தி ஜெயந்தி: உடுமலையில் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை - நகராட்சி ஆணையர் அறிவிப்பு

உடுமலை நகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் ப.பாலமுருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், "காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் ஆடுவதைக்கூடம் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதைக்கவோ அல்லது இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "உத்தரவை மீறி செயல்பட்டால் இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன் உரிமம் இரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களுக்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...