உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் உலக முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முதியோர்களுடன் படகு பயணம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் உலக முதியோர் தின விழா இன்று நடைபெற்றது. சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இவ்விழாவில் கலந்து கொண்டார்.



இந்த விழாவில், பல்வேறு முதியோர் இல்லங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர். விழாவின் சிறப்பம்சமாக உக்கடம் பெரியகுளத்தில், மாவட்ட ஆட்சியர் முதியவர்களுடன் படகு பயணம் செய்தார்.



பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "முதியோர் நலனுக்காக மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.

தொண்டாமுத்தூர் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், "உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து 19 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். அப்பகுதியில் மண்ணின் தரம் குறித்தும், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும்," என்றார்.

ஆனைக்கட்டி பகுதியில் செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக பொதுமக்கள் முறையிட்டது குறித்த கேள்விக்கு, "அந்த ரிசார்ட் மீது சில பிரச்சினைகள் குறித்து மக்கள் குறிப்பிட்டனர். குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்தனர். இது சம்பந்தமாக சேர்மன் முடிவெடுப்பார். ரிசார்ட் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....