மேட்டுப்பாளையம் அருகே பிக்கப் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கட்டிடத் தொழிலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் பிக்கப் வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டிடத் தொழிலாளி ரசூல் உயிரிழந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் அவிநாசி சாலையில் வசித்து வந்த ரசூல் என்ற கட்டிடத் தொழிலாளி, மேட்டுப்பாளையம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அன்னூரில் இருந்து கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த பிக்கப் வாகனம் ஒன்று, ஜீவா நகர் பகுதியில் ரசூலின் வாகனத்தின் மீது மோதியது.

இந்த மோதலில் ரசூல் சாலையில் தூக்கி வீசப்பட்டார். மேலும், பிக்கப் வாகனமும் சாலையின் நடுவே கவிழ்ந்தது. கடுமையாக காயமடைந்த ரசூல் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.



இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வாகன ஓட்டுநர் ஹரிகுமார் மீது அன்னூர் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...