ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், பேராசிரியர் காமராஜ் மகள்கள் விவகாரம் தொடர்பாக ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



Coimbatore: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பேராசிரியர் காமராஜ் மகள்கள் தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் நடைபெற்றது.

பேராசிரியர் காமராஜ் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகவும், அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அவரது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் துறவியாக மாற்றப்படுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காமராஜர் தனது மனுவில், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், ஒரு மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஈஷா மையத்துக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காமராஜரின் மூத்த மகள் கீதா, தனது தந்தைக்கு மொபைல் போனின் வாயிலாக தொடர்பு கொண்டு, ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய சகோதரி லதா உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷா யோகா மையத்தில் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...