ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், பேராசிரியர் காமராஜ் மகள்கள் விவகாரம் தொடர்பாக ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.



Coimbatore: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கிணங்க, கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை பேராசிரியர் காமராஜ் மகள்கள் தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் நடைபெற்றது.

பேராசிரியர் காமராஜ் தனது மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருப்பதாகவும், அவர்களை சந்திக்க ஈஷா அனுமதி மறுப்பதாகவும் தெரிவித்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், அவரது மகள்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தில் துறவியாக மாற்றப்படுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

காமராஜர் தனது மனுவில், ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும், ஒரு மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஈஷா மையத்துக்கு எதிரான குற்ற வழக்குகளின் விவரங்களை மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், காமராஜரின் மூத்த மகள் கீதா, தனது தந்தைக்கு மொபைல் போனின் வாயிலாக தொடர்பு கொண்டு, ஈஷா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய சகோதரி லதா உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில், எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளும், சமூக நலத்துறை அதிகாரிகளும் ஈஷா யோகா மையத்தில் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...