கோவை ஆலாந்துறை அருகே வீட்டில் 22 சவரன் நகைகள், ரூ.5.32 லட்சம் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை ஆலாந்துறை அருகே கள்ளிப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (27) என்பவர் கடந்த 27 ஆம் தேதி தனது குடும்பத்துடன் அவிநாசியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அவர் திரும்பி வந்து வீட்டைப் பார்த்தபோது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.5.32 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தனது அடையாளத்தை மறைக்க மங்கி கேப் மற்றும் கையுறைகளை அணிந்துகொண்டு ஒரு மர்ம நபர் சாவகாசமாக கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையடித்த மர்ம நபரைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...