கோவையில் ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரண்டு மர்ம நபர்கள் நூதன முறையில் பணம் திருடியுள்ளனர். இதே போன்று 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குனியமுத்தூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் உண்மையில் பணம் வரவில்லை. 24 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள், அவ்வாறு நடக்காததால் வங்கி கிளையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியேறும் பகுதியில் 'டேப்' ஒட்டி விட்டு வெளியேறியது தெரிய வந்தது. பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்று தோல்வியுற்று வெளியேறிய பிறகு, அதே நபர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து ரூ.30,000 திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.

இதையடுத்து வங்கி கிளை மேலாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேக நபர்கள் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், இதே முறையில் கோவை பெரியகடை வீதி ஏடிஎம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஏடிஎம் உள்ளிட்ட மொத்தம் 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது.

தற்போது தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...