கோவையில் ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இரண்டு மர்ம நபர்கள் நூதன முறையில் பணம் திருடியுள்ளனர். இதே போன்று 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குனியமுத்தூர் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளர்களுக்கு, பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. ஆனால் உண்மையில் பணம் வரவில்லை. 24 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என எதிர்பார்த்த வாடிக்கையாளர்கள், அவ்வாறு நடக்காததால் வங்கி கிளையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் பணம் வெளியேறும் பகுதியில் 'டேப்' ஒட்டி விட்டு வெளியேறியது தெரிய வந்தது. பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்று தோல்வியுற்று வெளியேறிய பிறகு, அதே நபர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து ரூ.30,000 திருடிச் சென்றது பதிவாகியுள்ளது.

இதையடுத்து வங்கி கிளை மேலாளர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேக நபர்கள் சென்ற பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்ட விசாரணையில், இதே முறையில் கோவை பெரியகடை வீதி ஏடிஎம் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஏடிஎம் உள்ளிட்ட மொத்தம் 5 ஏடிஎம்களில் திருட்டு நடந்துள்ளது தெரியவந்தது.

தற்போது தப்பியோடிய சந்தேக நபர்களைக் கண்டறிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...