தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு: கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவையில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவையொட்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் தொடங்கி வைத்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் இறுதி நாளான செப்டம்பர் 30 அன்று, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பேரணிக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், செல்வபுரம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் வள்ளி கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



மேலும், பெண்கள் காய்கறிகளை ஆபரணமாக அணிந்தும், முகத்தில் வண்ணம் பூசியும் கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் கோவையின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவியர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.



இந்த விழிப்புணர்வு பேரணி மூலம், சமூகத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...