கோவையில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகழாய்வுகள் குறித்த தேசிய மாநாடு

கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாட்டின் அண்மைக்கால அகழாய்வுகள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. தொல்லியல் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் "தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்" என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல உதவி தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வி.ப. யதீஸ்குமார் "தாமிரபரணி ஆற்றங்கரை தொல்லியல் அகழாய்வுகள்" குறித்து உரையாற்றினார்.

முனைவர் யதீஸ்குமார் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வுகள் பற்றி விரிவாக விளக்கினார். பாண்டியர்களின் பழைய துறைமுகங்களான கொற்கை மற்றும் அழகன்குளம் பற்றியும், தாமிரபரணி நாகரிகத்தின் பழமை குறித்தும் தொல்லியல் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.



ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விரைவில் பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்றும், அவற்றின் காலம் அறிவியல் முறைப்படி கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் அகழ்வாராய்ச்சி களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழைய பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டனர். மேலும், கல்படுகைகள் உள்ள பகுதிக்கும் சென்று ஆய்வுகளை நேரில் கண்டனர்.

இந்த நிகழ்வை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையமும் வாணவராயர் பவுண்டேஷனும் ஏற்பாடு செய்திருந்தன. கொங்கல்நகரம் களப்பயணத்தை நா. மகாலிங்கம் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. ஜெகதீசன் ஒருங்கிணைத்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...