மருத்தவ படிப்பிற்கான நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் களமிறங்கிய நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்தது.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இரவிலும் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.