உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம்: பொள்ளாச்சியில் திமுகவினர் கொண்டாட்டம்

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


Coimbatore: தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்டத்திற்கு நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதி கிருஷ்ணன், நகர்மன்றத் துணைத் தலைவர் கௌதம், நகரத் திமுக துணைச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் என பலரும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்ததையடுத்து, இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம் தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...