உலக இதய தினம்: பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை தனியார் மருத்துவமனை சார்பில் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: உலக இதய தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் மாரடைப்பு குறித்து இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை தனியார் இருதய மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் தொடங்கிய பேரணி கோவை சாலை, பல்லடம் சாலை, புதிய திட்ட சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது. மாரடைப்பு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இருதய நோய், குறிப்பாக மாரடைப்பு நோய் உலகளவில், அதுவும் இந்தியாவில் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மாரடைப்பு நோய் தான் மனித இனத்தை அழிக்கும் முதல் நோயாக கருதப்படுகிறது. 40 சதவீத மனித உயிர்கள் இழப்பிற்கு காரணம் மாரடைப்பு நோய் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டின் முடிவில் 25 சதவீத இந்திய மக்களை மாரடைப்பு நோய் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 வினாடிகளுக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பது வேதனையானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட், செஸ் விளையாட்டுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பது பெருமை, ஆனால் மாரடைப்பில் முதலிடம் என்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எனவே இளைஞர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடற்பயிற்சி, யோகா, உணவு பழக்க வழக்கங்களை மாற்றி இந்த நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...