கோவையில் 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு

கோவையில் GKNM மருத்துவமனை மற்றும் LMW நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' மாரத்தான் நடத்தியது. இதய குறைபாடு மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


Coimbatore: கோவையில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து 'ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்' என்ற மாரத்தான் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், அவர்களது வாழ்வில் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தினை துவக்கி வைத்தனர்.



மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் 1 & 3 கி.மீ தொலைவு ஓட்டம், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 5 கி.மீ ஓட்டம், மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. 5 மற்றும் 10 கி.மீ பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மொத்தம் ரூ.75,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.



இந்த மாரத்தானில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். குறிப்பாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு மூலம், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினருக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...