கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமும் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 28 அன்று நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



மாநகராட்சி ஆணையாளர் மாசிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி IAS அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.



இந்த முக்கிய நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க. சிவகுமார், நகர்நல அலுவலர் மருத்துவர் கே. பூபதி, உதவி ஆணையர் துரைமுருகன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) கே. மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ரன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...