கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாமும் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 28 அன்று நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



மாநகராட்சி ஆணையாளர் மாசிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி IAS அவர்கள் தூய்மைப்பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் தாட்கோ திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.



இந்த முக்கிய நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் க. சிவகுமார், நகர்நல அலுவலர் மருத்துவர் கே. பூபதி, உதவி ஆணையர் துரைமுருகன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) கே. மகேஷ்வரி, மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், ரன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...