கோவை ராமநாதபுரத்தில் பைக் திருட்டு: இருவர் கைது

கோவை ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள் வாகன சோதனையின் போது பிடிபட்டனர்.



கோவை: கோவை நகரில் அதிக விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் இரு நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.



செப்டம்பர் 27 அன்று ராமநாதபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நவ்புல் ரஹ்மான் மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சப்வான் என தெரியவந்தது.

மேலும், நவ்புல் ரஹ்மான் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...