கோவை ராமநாதபுரத்தில் பைக் திருட்டு: இருவர் கைது

கோவை ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்ட குற்றவாளிகள் வாகன சோதனையின் போது பிடிபட்டனர்.



கோவை: கோவை நகரில் அதிக விலை கொண்ட இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியில் இரு நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.



செப்டம்பர் 27 அன்று ராமநாதபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த நவ்புல் ரஹ்மான் மற்றும் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சப்வான் என தெரியவந்தது.

மேலும், நவ்புல் ரஹ்மான் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இவர்களிடமிருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...