கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி: காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி அமைத்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் உரையாற்றி உறுதிமொழி ஏற்றார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



அவர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



அவர்கள் "சுத்தமாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்", "குப்பை போடவே குப்பை தொட்டி", "சுத்தமான பூமி", "பசுமை பூமி" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...