கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி: காவல் துணை ஆணையர் ஸ்டாலின் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி அமைத்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் உரையாற்றி உறுதிமொழி ஏற்றார்.



கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



அவர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மாணவர்களுடன் சேர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.



அவர்கள் "சுத்தமாக இருங்கள் ஆரோக்கியமாக இருங்கள்", "குப்பை போடவே குப்பை தொட்டி", "சுத்தமான பூமி", "பசுமை பூமி" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...