திருப்பூரில் முதல்முறையாக தீபாவளி திருவிழா ஷாப்பிங் எக்ஸ்போ துவக்கம்

திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் பழங்கரை பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க வளாக கட்டிடமான ஐகேஎஃப் (IKF) இல் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆடை கண்காட்சியில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தங்களுக்கான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.



திருப்பூரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது ஆடைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். பின்னலாடையில் என்றும் சிறப்பம்சங்களுடன் திகழும் திருப்பூரில் ஒரே இடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளை இந்த கண்காட்சியில் வாங்க முடிகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆடைகள் இந்த கண்காட்சியில் கிடைப்பதும், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். அனைத்து வகையான ஆடைகளும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



முதல் முறையாக திருப்பூரில் நடைபெறும் இந்த நேரடி விற்பனை எக்ஸ்போவில் 50,000 பேருக்கு மேல் வருகை தரவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என்றும் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து விதமான ஆடைகளும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...