மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக தலைவரின் கணவரின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மன்றக் கூட்டம் பரபரப்பாக முடிவடைந்தது. திமுகவைச் சேர்ந்த தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, திமுக தலைவர் கலைவாணியின் கணவர் பாலமுரளியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் பேரூராட்சியில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் ரங்கநாதன், தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



பேரூராட்சிப் பகுதியில் சாக்கடைகள் முறையாகத் தூர்வாரப்படுவதில்லை என்றும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு குறைகளைக் கூறி திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதன் காரணமாக, தேதி குறிப்பிடாமல் இன்று நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...