மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக தலைவரின் கணவரின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. திமுக, அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் இன்று நடைபெற்ற மன்றக் கூட்டம் பரபரப்பாக முடிவடைந்தது. திமுகவைச் சேர்ந்த தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளைச் சேர்ந்த திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தின் போது, திமுக தலைவர் கலைவாணியின் கணவர் பாலமுரளியின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் பேரூராட்சியில் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் ரங்கநாதன், தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



பேரூராட்சிப் பகுதியில் சாக்கடைகள் முறையாகத் தூர்வாரப்படுவதில்லை என்றும், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனால் சுகாதாரச் சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு குறைகளைக் கூறி திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இதன் காரணமாக, தேதி குறிப்பிடாமல் இன்று நடைபெற்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக செயல் அலுவலர் தெரிவித்தார். மடத்துக்குளம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...