கோவை கவுண்டம்பாளையத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடிய திமுகவினர்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சட்ட விரோத பண பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத்விக்னேஷ் தலைமையில் பாட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக்கொண்டாடினர்.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜவஹர், சுந்தரம், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பகுதி துணைச்செயலாளர்கள் சங்கர், கண்ணகி, ஈஸ்வரன் பொருளாளர் வசந்த்குமார், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், சனில்குமார், மாமன்ற கவுன்சிலர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், வட்டசெயலாளர்கள் குட்டி என்கிற வேலுச்சாமி, ரமணன், குமரேசன், காளிதாஸ், தன்ராஜ், நிர்வாகிகள் எம்.கே.தாஸ், மின்னல் சுரேஷ், ராசு, சேகர், ரவி, ஜனா, மணி, ஆறுமுகம். ஈஸ்வரன், சங்கர், செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...