கோவை போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம்: காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை பிரிவின் 5வது ஆண்டு விழாவில் போக்குவரத்து காவலர்களுக்கான இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவின் ஐந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் செப்டம்பர் 25 அன்று நடத்தப்பட்டது.

இந்துஸ்தான் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நுரையீரல் சிகிச்சை பிரிவின் சிறப்பு மருத்துவர்களான டாக்டர் உன்னித்தன், டாக்டர் ஸ்ரீகாந்த், டாக்டர் நாகராஜன் மற்றும் டாக்டர் நந்த கோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

உலக நுரையீரல் நல தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த முகாமை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார், குறட்டை பாதிப்புகள் குறித்த பரிசோதனை முகாமையும் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து காவலர்கள் சாலைகளில் தினமும் பணியாற்றும் போது பல்வேறு வகையான மாசுக்களால் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் நலன் கருதி இந்த நுரையீரல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பரிசோதனையில் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துஸ்தான் மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் சிவசைலம் மேற்கொண்டிருந்தார். இந்த முகாம் போக்குவரத்து காவலர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...